பள்ளி,கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை – ஒடிசா மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
ஒடிசாவின் புவனேஷ்வர் நகரில் இன்று ஜனாதிபதியின் வருகையை ஒட்டி அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் அரை நாள் விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் ஒடிசா மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இன்று மாலை 3:30 மணிக்கு பூரியில் புகழ்பெற்ற ஜெகன்நாதர் கோவிலுக்கு செல்ல இருக்கிறார். அதன்பிறகு, புவனேஷ்வர் நகரில் அமைந்துள்ள 8 சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதையை செலுத்த இருக்கிறார்.
தமிழ்நாட்டிற்கு தனி கல்வி கொள்கை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!
Exams Daily Mobile App Download
ஜனாதிபதியின் பயணத்தில் அதிக அளவிலான பாதுகாப்பு வாகனங்கள் இயக்கப்படும் என்பதால், மிகுந்த போக்குவரத்துக்கு நெருக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால், புவனேஷ்வர் நகரில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று மதியம் அரை நாள் விடுமுறை அளிக்க புவனேஷ்வர் முனிசிபல் கார்ப்பரேஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மதியம் 1 மணிக்கு அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களும் மூடப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.