அரசுத் துறை காலிப்பணியிடங்கள் குறித்த தவறான தகவல்கள் – புதுச்சேரி அமைச்சுப் பணியாளர் சங்கம் புகார்!
புதுச்சேரியில் உள்ள பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அது குறித்து தவறான சில தகவல்கள் பரவி வருவதாக அமைச்சுப் பணியாளர் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
அரசு துறை வேலைவாய்ப்பு:
புதுச்சேரி அரசு சார்பில் இயங்கி வரும் துறைகளில் பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த காலிப்பணியிடங்கள் வழக்கமாக பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான செய்தி பரவி வருவதாக அமைச்சுப் பணியாளர் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இது குறித்து செயலாளர் ஆர்.ராமகிருஷ்ணன் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை அரசு பதவி உயர்வு மூலம் நிரப்பி வருகிறது. ஆனால் உதவியாளர் நிலைப் பணியிடங்கள் நேரடி ஆட்சேர்ப்பு மூலம் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என சில தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
பள்ளி,கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை – ஒடிசா மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
Exams Daily Mobile App Download
இந்த முறையால் நிர்வாக விஷயங்களில் அனுபவம் இல்லாத நபர்கள் பணியில் சேர்வதால், நிர்வாக சீர்குலைவு ஏற்படும். மேலும் உள்ளூர்வாசிகள் அரசாங்கப் பணிகளில் சேருவதற்கான வாய்ப்பை இதன் மூலம் இழக்க நேரிடும். அது மட்டுமில்லாமல், கீழ்ப்பிரிவு மற்றும் மேல்நிலை பிரிவு எழுத்தர் பணியிடங்களில் பணிபுரிந்து வருபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காமல் இருக்கிறது. அதனால் இந்த பணியிடங்களில் நேரடி ஆட்சேர்ப்பு நடத்தப்படக்கூடாது என சங்கம் புகார் அளித்துள்ளது.