தமிழக 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

0
தமிழக 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
தமிழக 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
தமிழக 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் நேற்று (ஜூன் 20) 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதனையடுத்து மறுகூட்டல், விடைத்தாள் நகல் ஆகியவற்றுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்‌ முறைகள் குறித்தும் அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மறுகூட்டல்:

தமிழகத்தில் கடந்த மே மாதம் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் 10ஆம் வகுப்பில் 9,12, 620 பேர் எழுதினர். மேலும் 12ம் வகுப்பில் சுமார் 8,06,277 பேர் தேர்வு எழுதினர். இந்த பொதுத் தேர்வுகள் மே 31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மதிப்பீட்டு பணிகள் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று (ஜூன் 20) தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 10ம் வகுப்பில் 93.76 சதவீதத்தினர் தேர்ச்சியும் பெற்றுள்ளனர். மேலும் 12ம் வகுப்பில் 93% தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 12ம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து ஜூன் 24ம் தேதி முதல் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஜூன் 22ம் தேதி முதல் 10ம் வகுப்பு தேர்வர்கள்‌ மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வில்‌ தாம்‌ தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும்‌ பள்ளி மாணவர்கள்‌ தனித்தேர்வர்கள்‌ மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்‌. மதிப்‌பெண்‌ மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஜூன் 22 முதல் 29ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

ரயிலில் பயணிப்போர் கவனத்திற்கு – இதை தெரிஞ்சுக்காம இருக்காதிங்க! உடனே பாருங்க!

மேலும் மாணவர்கள் பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள்‌ தேர்வெழுதிய தேர்வு மையம்‌ வழியாகவும்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌. மறுகூட்டலுக்கு ஒரு பாடத்திற்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும்‌ ஒப்புகைச்‌ சீட்டினை மாணவர்கள்‌ பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும்‌. இதில் மாணவர்கள் விடைத்தாள்‌ நகல்‌, மறுகூட்டல்‌ ஆகியவற்றில்‌ எதாவது ஒன்றிற்கு மட்டுமே தேர்வர்கள்‌ விண்ணப்பிக்க முடியும். விடைத்தாளின்‌ நகல் ‌பெற்ற பிறகு அவர்கள்‌ மறுகூட்டல்‌ / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்‌ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!