PM KISAN திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு – 11வது தவணை குறித்த முக்கிய அறிவிப்பு!
பிரதம மந்திரி விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் மூலமாக ஏழை விவசாயிகள் 4 மாதத்திற்கு ஒருமுறை 2000 வீதம் நிதியுதவி வாங்கி பயன் பெற்று வருகின்றனர். இந்த ஆண்டிற்கான நிதியை விவசாயிகள் பெறாத காரணத்தை கீழ் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி கேட்டு அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
PM KISAN திட்டம்:
இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகள் நலனுக்காக பிரதம மந்திரி விவசாயிகள் நிதியுதவி திட்டம் என்கிற ஒரு திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக ஏழை விவசாயிகள் நிதி உதவி பெற்று வருகின்றனர். அதாவது pm-kisan திட்டத்தின் மூலமாக நான்கு மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகள் ரூபாய் 2000 என்கிற கணக்கில் நிதி உதவி வாங்கி பயன் பெற்று வருகின்றனர். நான்கு மாதங்களுக்கு ரூபாய் 2000 வீதம் ஆண்டிற்கு மட்டுமே 6 ஆயிரம் வரைக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுவரை விவசாயிகள் இந்த பிரதம மந்திரி விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் மூலமாக 10 தவணைகளில் நிதியுதவி பெற்றுள்ளனர்.
Exams Daily Mobile App Download
10 ஆவது தவணை கடந்த ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. தற்போது விவசாயிகள் அனைவரும் பிரதம மந்திரி கிசான் நிதியின் 11ஆவது தவணைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் 11 ஆவது தவணை மே 31-ஆம் தேதி அல்லது ஜூன் மாதத் தொடக்கத்தில் கிடைக்க வாய்ப்புள்ளதாக அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில் சில விவசாயிகளுக்கு பதினோராவது தவணை நிதி உதவி கிடைத்துள்ளது. மேலும், சில விவசாயிகளுக்கு 11-வது நிதியுதவி வந்து சேரவில்லை.
விமானத்தில் பயணம் மேற்கொள்வோர் கவனத்திற்கு – ஐகோர்ட்டின் புதிய உத்தரவு!
11 ஆவது தவணை நிதியுதவி வாங்காத விவசாயிகள் 011-24300606, 18001155266, 011-24300606,155261, 1800-115-526 என்கிற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பணம் வராததற்கான காரணங்களைக் கேட்டு அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் [email protected]. மற்றும் [email protected] என்கிற மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் கொடுக்கலாம். pm-kisan இன் 11 ஆவது தவணையை பெற இருக்கும் விவசாயிகள் கண்டிப்பாக eKYC செயல்முறையை முடித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த செயல்முறையை முடிக்காத விவசாயிகளுக்கும் இந்த நிதியுதவி கிடைத்து இருக்காது என கூறப்படுகிறது.