விமானத்தில் பயணம் மேற்கொள்வோர் கவனத்திற்கு – ஐகோர்ட்டின் புதிய உத்தரவு!
இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனா பரவலின் தாக்கம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விமானத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று டெல்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
முகக்கவசம் கட்டாயம்:
இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து தொற்று பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் திரும்ப பெறுவதாக மத்திய அரசு கடந்த மார்ச் மாதத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து தற்போது அனைத்து தொழிற்துறைகளும், வணிக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. ஆனால் இந்தியாவில் இப்போது கொரோனா பரவலின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் இந்தியாவில் இந்த மாதத்தில் 4ம் அலை தொடங்க உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
அதன் காரணமாக தற்போது இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் தற்போது பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவலின் தாக்கம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல், கை கழுவுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை கட்டாயமாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 15 முதல் பள்ளிகள் திறப்பு! மாநில அரசு அறிவிப்பு!
இதனை தொடர்ந்து தற்போது விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு விதிமுறையை டெல்லி ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது விமானத்தில் பயணிகள் முகக்கவசம் அணியாமலும் அத்துடன் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாவிட்டாலும் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விதிமுறையை மீறி செயல்படுவோரின் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் டெல்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் உச்சத்தை தொடும் போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.