TNUSRB 969 சார்பு ஆய்வாளர் தேர்வு பட்டியல் ரத்து – நீதிமன்றத்தில் குவியும் கோரிக்கைகள்!
தமிழகத்தில் சார்பு ஆய்வாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை தற்போது முன்னெடுக்கப்பட்டு உள்ளது.
தேர்வு பட்டியல்:
தமிழகத்தில் சார்பு ஆய்வாளர் பணிக்கு 969 காலிப்பணியிடங்கள் இருப்பதாக கடந்த 2019 ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இப்பணிக்கான தேர்வுகள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் 20% பணியிடங்களானது காவல் துறையில் இருப்பவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு 1.34 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG) டெலிவரி – 4 முதல் 5 நாட்கள் ஆகலாம்!!
இதற்கான எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உடற்தகுதி தேர்வுக்கும், நேர்முகத்தேர்வுக்கும் அழைக்கப்பட்டனர். எழுத்துத்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. அதவாது, ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அனைவரும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தேர்வை ரத்து செய்யக் கூறி வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
TN Job “FB Group” Join Now
வழக்கை விசாரித்த நீதிமன்றம், முறைகேடுகள் தொடர்பாகவும், தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20% இடஒதுக்கீடு குறித்தும் உத்தரவிட்டது. ஏப்ரல் 15, 2021 ம் தேதி அன்று 969 சார்பு ஆய்வாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த தேர்வு பட்டியலையும் ரத்து செய்ய வேண்டும் என்றும், முன்னதாக முறைகேடு நடந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் இந்த பட்டியலில் உள்ளதாகவும் பல்வேறு மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் கோடை விடுமுறைக் கால நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
so exam app varum