சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG) டெலிவரி – 4 முதல் 5 நாட்கள் ஆகலாம்!!
கொரோனா இரண்டாம் அலை காரணமாக அடுத்து வரும் நாட்களில் சிலிண்டர் டெலிவரி கிடைப்பதற்கு நான்கு முதல் ஐந்து நாட்கள் வரையில் ஆகும் என்று கூறப்படுகிறது.
சிலிண்டர்கள் கிடைக்க தாமதம்:
கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. அதனால் அரசு மற்றும் முன்கள பணியாளர்கள் நோய்த்தடுப்பு பணிகளை விரைந்து செய்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. காய்கறி, மளிகை, பால் முதலியவை அத்தியாவசிய பொருட்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சமையல் எரிவாயும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது.
ஜூன் 15ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – தனியார் கல்வி நிறுவனங்கள் கோரிக்கை!!
இந்த கொரோனா பாதிப்பு சிலிண்டர் டெலிவரி பணியாளர்களையும் விட்டு வைக்கவில்லை. எல்லா நேரங்களிலும் மக்களுக்கு வீடுகளுக்கு சென்று எரிவாயு சிலிண்டர்களை ஊழியர்கள் விநியோகித்து வருகின்றனர். நாடு முழுவதும் 50,000 சிலிண்டர் பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமையல் எரிவாயு விநியோகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2வது அலையில் பாதிப்பு அதிகரித்திருப்பதால் சிலிண்டர் விநியோகிக்கும் ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
அதனால் அடுத்து வரும் நாட்களில் சிலிண்டர்கள் கிடைப்பதற்கு நான்கு முதல் ஐந்து நாட்கள் வரையில் ஆகும் என்று கூறப்படுகிறது. சிலிண்டர் விநியோகத்தில் ஈடுபடும் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து, அவர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போட முன்னுரிமை வழங்க வேண்டும் என்று சமையல் எரிவாயு விநியோகக் கூட்டமைப்பு சார்பாக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.