TNDALU பி.எச்டி மாணவர் சேர்க்கை 2021 – கால அவகாசம் நீட்டிப்பு!!
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு:
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையில் வரும் 2021- 2022ம் கல்வி ஆண்டிற்கான பிஎச்டி ஆராய்ச்சி படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்புகள் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த படிப்பிற்கு மொத்தம் 110 இடங்கள் உள்ளதாக பல்கலை அறிவித்துள்ளது.
TNUSRB 969 சார்பு ஆய்வாளர் தேர்வு பட்டியல் ரத்து – நீதிமன்றத்தில் குவியும் கோரிக்கைகள்!
இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்க மே 31ம் தேதி இறுதி நாளாக பல்கலை நிர்வாகம் தனது முதல் அறிவிப்பில் வெளியிட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலையில் பிஎச்டி படிப்பிற்கான சேர்க்கைக்கு காலஅவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று, முழு ஊரடங்கு காரணமாக 2021-22-ம் ஆண்டுக்கான பிஎச்டி சேர்க்கை ஜூன் 30 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.750ம், மற்றவர்களுக்கு ரூ.1,250ம் செயல்முறைக் கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்காக அடிப்படை கல்வித்தகுதி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக நுழைவுத்தேர்வு நடத்தப்படும். அதில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.