TNUSRB உதவி ஆய்வாளர் (SI) 444 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு?
தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் காவலர் துறையில் உள்ள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. அத்துடன் இதில் 444 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
கால அவகாசம்
கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அரசு போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. அத்துடன் கடந்த 2 ஆண்டுகளாக அரசு போட்டி தேர்வுகள் நடைபெறவில்லை. இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் காவலர் துறையில் உள்ள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. அத்துடன் இதில் 444 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளையுடன் கால அவகாசம் முடிவடைகிறது.
இந்தியாவில் மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு? கொரோனா வைரஸின் புதிய திரிபு தொற்று உறுதி!
மேலும் இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக நடத்தப்பட உள்ள உதவி ஆய்வாளர்களை தேர்வுக்கு ஏற்கனவே காவல் துறையில் பணிபுரிந்து வரும் தகுதியுடைய காவலர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதனால் இத்தேர்வுக்கு தகுதியுள்ள காவலர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
ஆனால் இதற்கு விண்ணப்பிக்க காவலர்கள் தங்களின் உயர் அதிகாரிகளிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும். இந்த சான்றிதழ் மூலமாக மட்டுமே பணிபுரியும் காவலர்கள் விண்ணப்பிக்க முடியும். இதில் பெரும்பாலனோர்க்கு உரிய நேரத்தில் தங்களது மேலதிகாரிகளிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற முடிவதில்லை. அதனால் இவர்களுக்கு உதவி புரியும் வகையில் 7 நாட்கள் கூடுதலாக கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அத்துடன் சான்றிதழைப் பெற இயலாதவர்கள் நேர்காணலின் போது இந்த சான்றிதழை சமர்ப்பிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.