TNUSRB உதவி ஆய்வாளர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் நீட்டிப்பு !
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் Sub-Inspectors of Police (Taluk) மற்றும் Sub-Inspectors of Police (AR) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த அரசு பணிக்கு என 444 பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
TNUSRB வேலைவாய்ப்பு விவரங்கள்:
தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் காவலர் துறையில் உள்ள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்வின் மூலம் தமிழக காவல் துறையில் காலியாக உள்ள Sub-Inspectors of Police (Taluk) மற்றும் Sub-Inspectors of Police (AR) 444 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக நடத்தப்பட உள்ள உதவி ஆய்வாளர்களை தேர்வுக்கு ஏற்கனவே காவல் துறையில் பணிபுரிந்து வரும் தகுதியுடைய காவலர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதனால் இத்தேர்வுக்கு தகுதியுள்ள காவலர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
விண்ணப்பதாரர்கள் 01.07.2022 தேதியின்படி 20 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் மற்றும் 30 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 01.07.1992 முதல் 01.07.2002 க்குள் பிறந்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு தேதியில் UGC / அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். WRITTEN EXAMINATION, PHYSICAL MEASUREMENT TEST, ENDURANCE TEST மற்றும் PHYSICAL EFFICIENCY TEST மூலம் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.36900 முதல் ரூ.116600 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. பல்வேறு தரப்பினரிடம் இருந்து இந்த பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தேர்வாணையம் கருத்தில் கொண்டு, இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஏப்ரல் 17-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.