தமிழக அரசில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0

தமிழக அரசில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ளன அறிவிப்பின்படி வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.
  • பெண் விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள், MS Office-ல் குறைந்தது 6 மாத சான்றிதழ் படிப்பு முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Follow our Instagram for more Latest Updates

  • மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் போன்ற திட்டங்களில் 2 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருப்பது கட்டாயமானதாகும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 31.03.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!