தமிழகத்தில் 112 பேருக்கு கொரோனா உறுதி – அறிக்கை தகவல்!!
தமிழகத்தில் இன்று (மார்ச் 29) ஒரே நாளில் சுமார் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் அதிகளவு பாதிப்பு சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் தற்போது கொரோனா புதிய பாதிப்புகள் சதமடித்து வருகிறது. அந்த வகையில், நீண்ட மாதங்களுக்கு பிற்பாடு கடந்த சில நாட்களாக மூன்று இலக்கங்களை தாண்டி கொரோனா பரவல் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 112 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
தமிழக கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு – ஆட்சேர்ப்பு வாரியம் அமைக்க உத்தரவு!!
இந்த எண்ணிக்கையில் சென்னை மீண்டுமாக முதலிடத்தை பிடித்துள்ளது. அந்த வகையில், சென்னையில் மட்டும் இன்று 34 பேருக்கு கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல செங்கல்பட்டு மாவட்டத்தில் 13 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 10 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை உயர்வு மக்கள் மத்தியில் மீண்டுமாக அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.