தமிழக கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு – ஆட்சேர்ப்பு வாரியம் அமைக்க உத்தரவு!!
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய ஆட்சேர்ப்பு வாரியத்தை அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆட்சேர்ப்பு வாரியம்
மத்திய மற்றும் மாநில அரசுத்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்கள் அனைத்தும் பல்வேறு தேர்வு வாரியங்கள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகளுக்குமான ஆட்சேர்ப்பு பணிகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கூட்டுறவு சங்கங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய ஆட்சேர்ப்பு வாரியத்தை அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
SSC GD கான்ஸ்டபிள் உடல் தகுதித்தேர்வு – அனுமதி அட்டை & தேர்வு தேதி குறித்த முக்கிய அறிவிப்பு!!
அதாவது, ஆவின் நிறுவனத்தில் புதியவர்களை சேர்ப்பதற்கான நியமனத்தை ரத்து செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, கால்நடை, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை ஆகியவற்றுக்கான கூட்டுறவு சங்கங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு தனி ஆட்சேர்ப்பு வாரியம் அமைக்கப்பட வேண்டும். அதுவரை, இந்த துறைகளில் புதியவர்களை நியமனம் செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.