TNPSC ரூ.2,05,700 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – 626 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழகத்தில், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய 626 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மே 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 போன்ற பணியிடங்களுக்கு தேர்வு மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இது மட்டுமல்லாமல் கூடுதலாக பொறியாளர், குழந்தை பாதுகாப்பு அதிகாரி போன்ற பணியிடங்களுக்கும் TNPSC மூலம் அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்தவகையில், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய 626 காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அடிப்படையில் தானியங்கிப் பொறியாளர் (மோட்டார் வாகன பராமரிப்புத் துறை) பணியில் 04 காலியிடங்கள் உள்ளன. மாத சம்பளம் ரூ.56,100 – 2,05,700 வழங்கப்படும்.
Exams Daily Mobile App Download
இந்த வகையில் இளநிலை மின் ஆய்வாளர் பணியில் 08 காலியிடங்கள் உள்ளன. உதவி பொறியாளர்(வேளாண்மை பொறியியல்) பணியில் 66 காலியிடங்கள் உள்ளன. உதவி பொறியாளர்(நெடுஞ்சாலைத் துறை) பணியில் 33 காலியிடங்கள் உள்ளன. இயக்குநர்(தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை) பணியில் 18 காலியிடங்கள் உள்ளன. மேலும் உதவி பொறியாளர்(நீர்வளத் துறை) பணியில் 01 காலியிடங்கள் உள்ளன. உதவிபொறியாளர் (பொதுப்பணித் துறை) பணியில் 1+ 307 காலியிடங்கள் உள்ளன. முதலாள் பணியில் 07 காலியிடங்கள் உள்ளன. தொழில்நுட்ப உதவியாளர் பணியில் 11 காலியிடங்கள் உள்ளன. உதவி பொறியாளர்(ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை) பணியில் 93 காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கான ஊதியம் ரூ. 37,700 – 1,38,500 ஆகும்.
இதை அடுத்து உதவி பொறியாளர்(தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) பணியில் 64 காலியிடங்கள் உள்ளன. உதவி பொறியாளர் (சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்) பணியில் 13 காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கான ஊதியம் ரூ.37,700 – 1,38,500 ஆகும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பொறியியல் துறையில் ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், விவசாயம், சிவில், தொழிலகம், உற்பத்தி போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பதாரர் 01.07.2022 தேதியின்படி கணக்கிடப்படும். 32 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி,எம் பி சி, பிசி, அனைத்து வகுப்பைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
தமிழகத்தில் கலைஞர் பிறந்தநாள் (ஜூன் 3) அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதல்வர் உத்தரவு!
மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கும் வயது வரம்பில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு, தேர்வுக் கட்டணமாக ரூ.200 ஆன்லைனில் செலுத்த வேண்டும். ஒருமுறை பதிவு செய்யாதவர்கள், ரூ.150 செலுத்தி அடிப்படை விவரங்களை இணையவழி நிரந்தரப் பதிவு மூலமாக கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டண விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த பணிக்கான எழுத்துத் தேர்வு மே 26 அன்று காலையில் தாள் ஒன்று மற்றும் மதியம் தாள் 2 நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.