TNPSC Group 4 பதவிக்கு 10,117 பணியிடங்கள்.. சமூக இட ஒதுக்கீடு ரீதியாக காலியிடங்கள் விவரம்..!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது சமீபத்தில் குரூப் 4 பணியிடங்களுக்கான எண்ணிக்கையை 7,381லிருந்து 10,117ஆக அதிகரித்து செய்தி வெளியிட்டது. தற்போது அதற்கான இட ஒதுக்கீடு விவரங்கள் வெளியாகி உள்ளது. அவை பற்றி இப்பதிவில் காண்போம்.
TNPSC Group 4 இட ஒதுக்கீடு:
தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் விஏஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலமாக நிரப்பப்படும். அந்த வகையில் TNPSC சார்பில் தட்டச்சர், இளநிலை உதவியாளர், வரைவாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பதவிகளுக்கு காலியாக உள்ள 7301 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை சுமார் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதி இருந்தனர்.
நாடு முழுவதும் ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – ஆதாருடன் இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு!
இந்நிலையில் இந்த குரூப் 4 பணியிடங்களுக்கான எண்ணிக்கையை 7,381லிருந்து 10,117ஆக TNPSC அதிகரித்துள்ளது. அதன் படி, வி.ஏ.ஓ காலி பணியிடங்களுக்கான எண்ணிக்கை 274 இல் இருந்து 425 ஆக உயர்ந்துள்ளது. ஜூனியர் அசிஸ்டன்ட் , பில் கலெக்டர் ஆகிய காலிப் பணியிடங்கள் 3731லிருந்து 4952ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டேபிள் பி பணிகள் 163இலிருந்து 252 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.