தமிழக மின்வாரியத்தில் 56,000 காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் – மார்ச் 28ம் தேதி மாபெரும் பேரணி!

0
தமிழக மின்வாரியத்தில் 56,000 காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் - மார்ச் 28ம் தேதி மாபெரும் பேரணி!
தமிழக மின்வாரியத்தில் 56,000 காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் - மார்ச் 28ம் தேதி மாபெரும் பேரணி!
தமிழக மின்வாரியத்தில் 56,000 காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் – மார்ச் 28ம் தேதி மாபெரும் பேரணி!

தமிழகத்தில் மின்வாரியத்தில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டி மாபெரும் பேரணியை நடத்த முடிவு செய்துள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மின்வாரிய ஊழியர்கள்

தமிழக மின்வாரியத்தில் பொறியாளர்கள், களப்பணியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களில் 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளனர். இதனால் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. இந்த காலிப்பணியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்பாமல் நிரந்தரமான பணியாளர்களை கொண்டு நிரப்பப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக பள்ளிகளுக்கு நாளை (மார்ச் 25) முழு வேலைநாள் – முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை!

மேலும் இந்த அறிக்கையில், கனமழை, புயல், வெள்ளம், கொரோனா காலகட்டம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மின்வாரிய பணியாளர்கள் விடுமுறையின்றி பணி செய்து வந்தனர். இதனால் இவர்களுக்கான ஊதிய உயர்வை மின்வாரியத்துறை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் மின்வாரியத்துறை காலிப்பணியிடங்களை நிரப்பும் போது SC/ST ஆகியோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

இந்த கோரிக்கைகளை முன்வைத்து வருகிற மார்ச் 28ம் தேதி அன்று தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர் விடுதலை முன்னணியும் இணைந்து மாபெரும் பேரணி நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் அன்று முதல்வரை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்த இருப்பதாகவும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!