TNPSC தேர்விற்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியீடு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு போட்டித்தேர்வில் பங்கேற்றவர்களுக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளது. இது குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
TNPSC தேர்வு:
தமிழகத்தில் ஒரு நிலையான அரசு பணியில் சேர வேண்டும் என்பது இளைஞர்களின் லட்சியமாக இருந்து வருகிறது. முன்னெல்லாம் அரசு வேலைவாய்ப்பகத்தில் கல்வித்தகுதியினை பதிவு செய்தவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டு வந்தது. அதன் பிறகு அதிகரித்த மக்கள் தொகை மற்றும் அரசு பணி நியமனங்களில் நடைபெற்ற முறைகேடு போன்றவைகளால் நேரடி பணி நியமனம் ரத்து செய்யப்பட்டது. போட்டித் தேர்வுகள் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிகள் வழங்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் தொடங்கப்பட்டு அரசு பணிக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
TNPSC குரூப் 4/ VAO (LANG) தேர்விற்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – ஆன்லைன் தேர்வுகள்!!
அரசு துறைகளில் உள்ள காலிபணியிடங்களை பொறுத்து அவ்வவ்போது அரசு TNPSC போட்டித் தேர்வு குறித்து அறிவுப்புகளை வெளியிடுகிறது. அதன்படி ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்கள் அமைக்கப்பட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தயாரிக்கப்பட்ட வினாத்தாள் கொண்டு போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக TNPSC தேர்வுகள் நடைபெறவில்லை. தற்போது அரசு ஊரடங்கில் தளர்வுகளை அளித்து வருவதால் விரைவில் அரசு பணிகளுக்கான தேர்வு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.
முக்கிய அறிவுறுத்தல்கள்:
- தேர்வர்கள் விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும் விடைகளை குறிக்கவும் கருப்பு நிற மை பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறினால் அவ்வாறான விடைத்தாள்கள் தேர்வாணையத்தால் செல்லாததாக்கப்படும்.
- எந்த ஒரு தேர்வரும் முற்பகலில் நடைபெறும் தேர்விற்கு 9.15 மணிக்குப் பின்னர் தேர்வுக்கூடத்திற்குள் நுழையவோ 1.15 மணிக்கு முன்னர் தேர்வுக்கூடத்திலிருந்து வெளியேறவோ அனுமதிக்கப்படமாட்டார்கள். எந்த ஒரு தேர்வரும் பிற்பகலில் நடைபெறும் தேர்விற்கு 2.15 மணிக்குப் பின்னர் தேர்வுக்கூடத்திற்குள் நுழையவோ 5.15 மணிக்கு முன்னர் தேர்வுக்கூடத்திலிருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
- விண்ணப்பதாரர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடத்தினை எளிதில் தெரிந்து கொள்ளும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில், விரைவுத்தகவல் குறியீடு (QR CODE ) அச்சிடப்பட்டுள்ளது. இதனை விரைவுத்தகவல் குறியீட்டு செயலி மூலம் ஸ்கேன் செய்து தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடத்தினை (Google Map) மூலமாக தெரிந்து கொண்டு பயன் பெறலாம்.
- தேர்வு அறைக்குள் அலைபேசி மற்றும் வேறு ஏதேனும் மின்னணு உபகரணங்கள் கொண்டுசெல்ல அனுமதியில்லை. எனவே விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் பத்தி எண் 17 (A) (IV ) ல் உள்ளகுறிப்பின்படி தங்களது அலைபேசி உட்பட பிற உடமைகளை தேர்வுமையத்திலுள்ள பாதுகாப்பு அறையில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இருப்பினும் சொந்த உடமைகளை பாதுகாப்பு அறையில் வைப்பது தேர்வரின் சொந்த பொறுப்பிற்குட்பட்டதாகும்.