தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர், நவம்பரில் மழைக்கால விடுமுறை? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் கோடை விடுமுறை வழங்கப்படுவது போல பருவமழை கால விடுமுறை வழங்கலாம் என பல்வேறு தரப்பினர் கோரி வருகின்றனர். மேலும் அரசு இதனை ஏற்குமா? என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
மழைக்கால விடுமுறை:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் மத்திய, மாநில அரசு மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கொரோனா தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது. எனவே 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டது.
EPFO ஊழியர்களின் கவனத்திற்கு – விபத்து மரணம் ஏற்பட்டால் இரட்டிப்பு தொகை!
அதனை தொடர்ந்து 8ம் வகுப்பு வரையிலானவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இம்மாத தொடக்கம் முதல் இன்று வரை 7 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை ஈடு செய்ய இனி வரும் சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும்.
தமிழகத்தில் நாளை (நவ.13) உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
டிசம்பர் மாதத்தில் நடத்தப்படும் அரையாண்டு தேர்வை கருத்தில் கொண்டு பாடங்களை விரைந்து நடத்துவதால் மாணவர்களின் கற்றலில் பாதிப்பு ஏற்படும் என கருதப்படுகிறது. தமிழகத்தில் கோடை விடுமுறையாக வழங்கப்படும் 45-50 நாட்களை 25 நாட்களாக குறைத்து மீதமுள்ள நாட்களை பருவமழை கால விடுமுறையாக அரசு அறிவித்தால் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு இருக்காது என பலரும் கூறி வருகின்றனர். இந்த யோசனையை தமிழக அரசு ஏற்குமா என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
உபயோகமான யோசனை