தமிழகத்தில் நாளை (நவ.13) உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தின் மாமன்னர் இராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் அவரால் கட்டப்பட்ட தஞ்சை பெருவுடையார் கோயிலில் கொண்டாடப்படும். அந்த வகையில் நாளை மாமன்னர் இராஜராஜ சோழனின் 1036வது சதய விழா கொண்டாடப்பட உள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
இந்திய மன்னர்களில் தனிச்சிறப்பு மிக்க மாமன்னர் இராஜராஜ சோழன் ஆவார். இவர் தஞ்சையில் உள்ள பெருவுடையார் கோயிலை கட்டிய சிறப்பைப் பெற்றுள்ளார். தஞ்சை பெரிய கோவில் உலக அளவில் பிரபலமாகும் அளவிற்கு மிகுந்த சிறப்புடைய கோயிலாக மாமன்னர் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டுள்ளது. இத்தகு தனிச்சிறப்பு பெற்ற மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி சதய நட்சத்திர நாளில் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
அந்த வகையில் தஞ்சை பெருவுடையார் கோயிலில் காலையில் மங்கள வாத்தியம் முழங்க விழா தொடங்கி தேவாரா பாடல்கள் பாடி பூஜைகள் செய்யப்படும். அதோடு மட்டுமல்லாமல் திருமுறை வீதியுலா, கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், சிறப்பு சொற்பொழிவுகள் என ஆண்டுதோறும் 2 நாட்களுக்கு சதய விழா விமரிசையாக கொண்டாடப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளித்து ஒரு நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.
தமிழக போக்குவரத்து கழக தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்கள் கவனத்திற்கு – அமைச்சர் அறிவிப்பு!
இந்நிலையில் இந்த ஆண்டு மாமன்னர் இராஜராஜ சோழனின் 1036 – வது சதய விழா நாளை (நவ.13) சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அதனால் தஞ்சை மாவட்டத்தில் இராஜராஜ சோழனின் 1036 – வது சதய விழாவை முன்னிட்டு நாளை பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.