TNPSC Departmental Exam டிசம்பர் அறிவிப்பு 2023 – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
2023 ஆம் ஆண்டுக்கான டிசம்பர் மாத துறைத் தேர்வுக்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சமீபத்தில் வெளியானது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ள நிலையில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
TNPSC துறைத்தேர்வு அறிவிப்பு:
- டிசம்பர் 2019 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட துறைத்தேர்வை அரசு பணியில் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என அனைவரும் எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இவ்வறிக்கை நாளன்று 16 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
- ஒவ்வொரு தேர்விற்கும் ரு.200/- தேர்வு கட்டணமாகவும், பதிவு கட்டணமாக ரு.30/- ம் சேர்த்து இணையவழி செலுத்தும் முறையில் அதாவது இணையவங்கி / பற்று அட்டை / கடன் அட்டை முறை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு முறையில் மட்டுமே ஆன்லைன் முறையில் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
TNPSC குரூப் 4 Online Class
- Objective Type in Computer Based Test தேர்வுகள் 09.12.2023முதல் 17.12.2023 வரையிலும் நடைபெற உள்ளது. அதேபோல் Descriptive Type தேர்வுகள் 12.12.2023 முதல்15.12.2023 வரை ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 26.10.2023 உடன் முடிவடைய உள்ள, நிலையில் சில நிர்வாக காரணங்ளுக்காக இந்த தேர்வுக்கு 31.10.2023 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.