TNPSC கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுகள் மூலமாக தகுதியான நபர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து கூட்டுறவு தணிக்கைத் துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக TNPSC தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, வயது வரம்பு & பாடத்திட்டம்! முழு விபரம் இதோ!
இப்பணிக்கு 30 வயது நிரம்பியவர்கள் வரை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க எம்.ஏ(கூட்டுறவு) அல்லது எம்,காம்., எம்.காம் (கூட்டுறவு) மற்றும் கூட்டுறவில் டிப்ளமோ அல்லது ஐசிஏஐ உள்ளிட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இதில் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்ற தேர்வுகளின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இப்பணிக்கு நியமிக்கப்படுவர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 56,100 முதல் 1,77,500 வரை வழங்கப்படுகிறது.
அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் ‘குக் வித் கோமாளி சீசன் 3’ – கடுப்பான ரசிகர்கள்!
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விரும்புபவர்கள் http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற இணையதளத்தில் சென்று வருகிற பிப்ரவரி 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்து தேர்வு ஏப்ரல் 30ம் தேதி அன்று காலை தாள்-I, மதியம் தாள்-II எழுத்துத் தேர்வு நடைபெறும். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற https://www.tnpsc.gov.in/