TNPSC குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் காலிப்பணியிடங்கள் – 5 மாவட்டங்களில் தேர்வு!
தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 5 மாவட்டங்களில் இதற்கான தேர்வுகள் கணினி முறையில் இன்று நடைபெறுகிறது என தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்த விபரங்களை காண்போம்.
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பின் காரணமாக அரசு சார்ந்த போட்டித் தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்து வந்தது. பின்னர் கொரோனா குறைந்த நிலையில் போட்டி தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், குழந்தை பாதுகாப்பு அலுவலர் பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்புகள் சமீபத்தில் தமிழ்நாடு தேர்வு ஆணையம் வெளியிட்டது.
அக்னிபாத் வீரர்களுக்கு 48 லட்சம் இன்சூரன்ஸ், தனி சீருடை & 30 நாள் லீவு – IAF அறிக்கை வெளியீடு!
இந்த குழந்தை பாதுகாப்பு அலுவலர் தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடைபெறும் என ஏற்கனவே TNPSC அறிவித்திருந்த நிலையில், இந்த அறிவிப்புக்கு பல தலைவர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தமிழிலும் தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்த குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிகளுக்கான தேர்விற்கு வரவிருக்கும் தேர்வர்கள் அனைவரும் முன்கூட்டியே வருமாறு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு ஆணையம் அறிவித்திருந்தது.
Exams Daily Mobile App Download
அதன்படி, இந்த தேர்வு இன்று தமிழகத்தில் 5 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது என்று தமிழ்நாடு தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதாவது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இந்த தேர்வு நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது. இந்த தேர்வுகள் காலை 9:30 மணி முதல் 12.30 மணி வரை முதல் நிலை தேர்வுகளும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை இரண்டாவது தாள் தேர்வு நடைபெறுகிறது. குழந்தை பாதுகாப்பு அலுவலர் பணிக்கான தேர்வு முழுக்க முழுக்க கணினி வழியில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.