TNPSC தேர்வு சென்னையில் மட்டுமே…! தேர்வாணையம் அதிரடி!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு:
Vocational Counsellor மற்றும் Community Officer பதவிக்கான அறிவிப்பு ஜூலை மாத இறுதியில் வெளியானது. இந்த அறிவிப்பின் படி, இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT) எனப்படும் கணினி வழித் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.1,30,800/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய தொழில் ஆலோசகர் (மருத்துவ கல்வித் துறை) மற்றும் தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரிய சமூக மேம்பாட்டு பணியில் அடங்கிய சமூக அலுவலர் (தமிழ்நாடு நகர்புற வாழ்விட வாரியம்) பதவிகளுக்கான கணினி வழித் தேர்வு 12.11.2022 மற்றும் 13.11.2022 அன்று சென்னை, மதுரை, கோயம்பத்தூர், சேலம், இருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
TN TET Paper 1 தேர்விற்கு இன்னும் 4 நாட்கள் தான் இருக்கு? வெற்றி பெற இதை உடனே செய்யுங்கள்!!
தற்போது இந்த எழுத்து தேர்வு சில நிர்வாக காரணங்களால் சென்னையில் மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணைய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC Notice
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்