TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – தவறாமல் படிங்க!
தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் தகுதியான நபர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படுகின்றனர். இதனை தொடர்ந்து கூட்டுறவு தணிக்கைத் துறையில் உதவி இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இதனை தொடர்ந்து இப்பணிக்கான தேர்வு வருகிற ஏப்ரல் 30ம் தேதி அன்று நடைபெற உள்ளது என்று TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது.
TNPSC தேர்வர்கள்
தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தகுதியான ஆட்கள் நியமிக்கப்படுகிறார்கள். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குரூப் 2 தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வு மூலமாக 5529 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதையடுத்து குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி (DA) உயர்வு – வலுக்கும் கோரிக்கை!
இத்தேர்வு மூலமாக 7301 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கூட்டுறவு தணிக்கைத் துறையில் உதவி இயக்குநர் பணியிடத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இப்பணியிடத்திற்கு எம்.ஏ(கூட்டுறவு) அல்லது எம்,காம்., எம்.காம் (கூட்டுறவு) மற்றும் கூட்டுறவு பிரிவில் டிப்ளோமா அல்லது ஐசிஏஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளின் மூலமாக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Exams Daily Mobile App Download
இப்பணியில் நியமிக்கப்படுவர்களுக்கு மாத சம்பளம் ரூ.56,100 முதல் 1,77,500 லட்ச ரூபாய் வரை வழங்கப்படும். தற்போது இப்பணிக்கான தேர்வு தேதி குறித்த அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கூறியதாவது, கூட்டுறவு தணிக்கைத் துறையில் உதவி இயக்குனர் பணியிடத்திற்கு வருகிற ஏப்ரல் 30ம் தேதி அன்று தேர்வு நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அத்துடன் இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் பெற விரும்புவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.