தமிழக அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி (DA) உயர்வு – வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். சட்டசபை கூட்டத்தொடரில் அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அகவிலைப்படி:
இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அதிகரித்து வரும் விலைவாசிகளுக்கு ஏற்ப அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக நிலவிய பொருளாதார நெருக்கடியால் ஊழியர்களுக்கு அகவிலைப்படி தொகை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த தொற்று நோய் தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. அரசின் முயற்சியால் பாதிப்புகள் இறங்கு முகத்தில் சென்றதும் பொருளாதார நெருக்கடி நிலவத் தொடங்கியது. இந்த நேரத்தில் ஊழியர்கள் அகவிலைப்படியை மீண்டும் வழங்க வேண்டும் மேலும் அவை உயர்த்தப் பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
இதனையடுத்து கடந்த 2021 ஜூலை மாதம் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 2 கட்டங்களாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அகவிலைப்படி 31% ஆக வழங்கப்பட்டு வந்த நிலையில் 2022 முதல் மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் கடந்த 1ம் தேதி முதல் மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு தற்போது 34% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்த்தப்பட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Exams Daily Mobile App Download
மேலும் மத்திய அரசு அறிவித்தது போல அகவிலைப்படி 34% ஆக உயர்த்தி அறிவிக்க வேண்டும். டப்பு சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் என்று ஊழியர்கள் எதிர்பார்பதாக தெரிவித்தார். ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த அகவிலைப்படி உயர்வில் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.