TNPSC 29 உதவி இயக்குனர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்ப பதிவு தொடக்கம்! மார்ச் 26 கடைசி நாள்!
வரும் மே மாதம் நடத்தப்பட இருக்கும் TNPSC உதவி இயக்குநர் பதவிக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செயல்முறைகள் தற்போது துவங்கி இருக்கும் நிலையில், விண்ணப்பதாரர்கள் மார்ச் 26 வரை விண்ணப்ப பதிவுகளை செலுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TNPSC தேர்வு:
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் தடை செய்யப்பட்ட TNPSC தேர்வுகளை இந்த ஆண்டு நடத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. அந்த வகையில் 5000க்கும் மேற்பட்ட காலியிடங்களை உள்ளடக்கிய குரூப் 2 மற்றும் 2 A பதவிக்கான தேர்வுகள் வரும் மே மாதம் நடத்தப்பட இருக்கிறது. அதே நேரத்தில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பானது மார்ச் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நகரம் மற்றும் கிராமப்புற திட்டமிடல் உதவி இயக்குநர் பதவிக்கான தேர்வுகள் மே 28 அன்று இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று TNPSC அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10, 11 & 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு!
அந்த வகையில் இப்பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் மார்ச் 26 வரை ஆன்லைன் விண்ணப்பங்களை tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செலுத்திக் கொள்ளலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி மே 28 அன்று காலை 9.30 முதல் மதியம் 12.30 வரையும் (தாள் I), பிற்பகல் 2.00 முதல் மாலை 5.00 மணி வரையும் (தாள் II) 2 கட்டமாக தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இப்போது உதவி இயக்குனர் பணிக்கான தகுதி, வயது வரம்பு, கட்டணம் உள்ளிட்ட விவரங்களை விரிவாக காணலாம்.
பதவி – உதவி இயக்குனர்
காலியிடங்கள் – 29
வயது வரம்பு – ஜூலை 1, 2022 அன்று 32 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், என்றாலும் SC, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s, BCMs மற்றும் ஆதரவற்றவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
கல்வித்தகுதி – நகரம், நகர்ப்புறம், வீட்டுவசதி, கிராமப்புறம், உள்கட்டமைப்பு, பிராந்தியம் அல்லது போக்குவரத்து, சுற்றுச்சூழல் திட்டமிடல் ஆகியவற்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது ஏதேனும் கல்வி நிறுவனத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆர்கிடெக்ட்ஸின் அசோசியேட்டாக இருக்க வேண்டும். மேலும் B.Arch பட்டம் அல்லது டிப்ளமோ அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். தேசிய கட்டிடக்கலை டிப்ளமோவுக்கு சமமான கல்வியை பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம் – எழுத்துத் தேர்வுக் கட்டணமாக 200 ரூபாயை நெட் பேங்கிங் / கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்ப முறை – உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் நுழையவும் – tnpsc.gov.in
முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள Apply Online என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். இப்போது உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லை உருவாக்க ‘New User’ என்பதை கிளிக் செய்யவும். விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும். ஆவணங்களைப் பதிவேற்றவும். பிறகு ஆன்லைன் மூலம் கட்டணத்தை செலுத்தவும். விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்து, எதிர்கால தேவைகளுக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
தேர்வு செயல்முறை – விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு என இரண்டு நிலைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்.
குறிப்பு – மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் https://tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தை அணுகலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.