தமிழகத்தில் 10, 11 & 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு!

0
தமிழகத்தில் 10, 11 & 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு!
தமிழகத்தில் 10, 11 & 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு!
தமிழகத்தில் 10, 11 & 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும் என்பது பற்றிய செய்தி வெளியாகி உள்ளன. அந்த செய்தி குறிப்பில் 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையை நாளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிடுவார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

பொதுத்தேர்வு அட்டவணை:

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் காரணமாக 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 2 ஆண்டுகளாக சில மாதங்கள் மட்டுமே நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. முன்னதாக மாணவர்கள் பாதுகாப்புக்காக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வழி வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 2 ஆண்டுகளாக எந்த தேர்வும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா 3 வது அலை தாக்கம் குறைந்ததால், பிப். 1ல் இருந்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன.

மாநிலத்தில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை – அருமையான வாக்குறுதி!

அதே நேரத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு தள்ளி வைக்கப்பட்ட திருப்புதல் தேர்வு இந்த மாதம் நடந்து முடிந்தது. கடந்த வருடம் கொரோனா தொற்று பிரச்சனையால் தேர்வு நடத்தாமல் மாணவர்கள் அனைவருக்கும், ‘ஆல் பாஸ்’ வழங்கப்பட்டது. இருப்பினும் நடப்பு ஆண்டு கண்டிப்பாக பொதுதேர்வு நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பின் அடிப்படையில் 10, 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை ஏப்ரல், மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஹாப்பி நியூஸ் – மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை! விரைவில் அமல்!

இதற்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அட்டவணைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது, இருப்பினும் பொதுத்தேர்வு கால அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமல் இருப்பதால், பொதுத் தேர்வு எப்பொழுது நடைபெறும் அதற்கான தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும் என்ற கேள்வி பலரும் எழுப்பி வருகின்றனர். இதன் அடிப்படையில் தமிழகத்தில் 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை நாளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வெளியிடுகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!