தமிழகத்தில் தமிழ் தெரிந்தவர்களுக்கான அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!
தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதத்தில் வெளியானது. அங்கு கோவில் பூசாரி பதவிக்கு என ஒரே ஒரு காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
தமிழக இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு விவரங்கள் :
- குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்க விரும்புவோர் நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்தவராக வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.7,400/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.
- பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
- அனைத்து விண்ணப்பதாரிகளும் ரூ.300/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் 07.07.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.