இந்து சமய அறநிலையத்துறையில் எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தருமபுரி மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு என மொத்தம் 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
- அலுவலக உதவியாளர் பதவிக்கு என 7 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- 01.01.2023 அன்று விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
- எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 11.03.2023 மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.