தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு ரூ.13200/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஓதுவார், அலுவலக உதவியாளர், பரிச்சாரகர் போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்ப சென்னை மாவட்ட, சைதாப்பேட்டை, அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் திருக்கோயிலில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
சுயம்பாகி – 01 பணியிடம், பரிச்சாரகர் – 01 பணியிடம், ஓதுவார் – 01 பணியிடம், விளக்காண்டி – 01 பணியிடம் அலுவலக உதவியாளர் – 01 பணியிடம், திருமண மண்டப காவலர் – 01 பணியிடம் மற்றும் பெருகுநர் – 03 பணியிடங்கள் என மொத்தம் 9 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஜூலை 1 அன்றைய தினத்தின் படி, குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Exams Daily Mobile App Download
அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓதுவார் பணிக்கு அரசு அல்லது சமய நிறுவனங்களில் தேவாரம் பாடுவதில் சான்றிதழ் பெற்றவர்கள் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற பணிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் சென்னை மாவட்டத்தில் உள்ள இந்து மதத்தை சேர்ந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.இந்த அறநிலையத்துறை பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த அறநிலையத்துறை பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணிக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.13,200/- வரை மாத சம்பளமாக தரப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்