தமிழக அரசில் 141 உதவியாளர் காலிப்பணியிடங்கள் – 8வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் (TNCSC) இருந்து திருச்சி மாவட்ட அலுவலகத்தில் உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Record Clerk, Assistant, Security/ Watchman ஆகிய பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு ஆண்களுக்கான பணியிடங்களாக ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள ஆண் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNCSC |
பணியின் பெயர் | Record Clerk, Security/ Watchman |
பணியிடங்கள் | 156 |
கடைசி தேதி | 15.11.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
தமிழக அரசு வேலைவாய்ப்பு :
TNCSC திருச்சி நிறுவனத்தில் மாவட்ட அலுவலகத்தில் Record Clerk, Assistant, Security/ Watchman ஆகிய பணிகளுக்கு 141 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Record Clerk – 54 பணியிடங்கள்
- Assistant – 52 பணியிடங்கள்
- Security/ Watchman – 35 பணியிடங்கள்
Assistant வயது வரம்பு :
விண்ணப்பிப்போர் 01.07.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32-37 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிகளுக்குமான வயது தளர்வுகளை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre – Join Now
TNCSC கல்வித்தகுதி :
- பருவகால பட்டியல் எழுத்தர் (Record Clerk) – ஏதேனும் ஒரு இளநிலை அறிவியல் (B.Sc) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- உதவுபவர் (Assistant) – அரசு பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- காவலர் (Security/ Watchman) – அரசு பாடத்திட்டத்தில் 8ம் வகுப்பு தேச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
TNCSC ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழ்கண்டவாறு ஊதியம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- பருவகால பட்டியல் எழுத்தர் – ரூ.2,410 + அகவிலைப்படி
- உதவுபவர் & காவலர் – ரூ.2,359 + அகவிலைப்படி
தேர்வு செயல்முறை :
இந்த அரசு பணிகளுக்கு பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் நேர்கணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 30.11.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.