தமிழகத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !
தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமுதாயத்தில், பணிபுரியும் இடங்களில் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் ஏற்படுத்தப்படுள்ள ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ தொடங்க உள்ளது. இதில் மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், வழக்கு பணியாளர், இரவு காவலர், ஓட்டுநர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆதார் எண் இல்லாவிட்டாலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் – ஆணையர் அறிவிப்பு!
மேற்கண்ட இப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பம் தகுதியான பெண்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை, சம்பளம் உள்ளிட்ட விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களையும் tenkasi.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழக மின்வாரியத்தில் 56,000 காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
விண்ணப் பத்தை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பின் அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து ‘மாவட்ட சமூகநல அலுவ லகம், பி/107, சுப்பிரமணியபுரம் தெரு, வ.உ.சி. மைதானம் எதிரில், திருவனந்தபுரம் ரோடு, பாளையங் கோட்டை, திருநெல்வேலி 627 002’ என்ற முகவரிக்கு வரும் 17-ம் தேதிக்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.