கொரோனா இறப்பு சான்றிதழ் – மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
மத்திய அரசு சார்பில் கொரோனா இறப்பு சான்றிதழ் தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. அதன்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 30 நாட்களுக்குள் உயிரிழந்தால் மட்டுமே அது கோவிட் -19 காரணமாக இறப்பு என கருதப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா இறப்பு:
மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து செப்டம்பர் 3 ஆம் தேதி கோவிட் -19 இறப்புகளுக்கான அதிகாரப்பூர்வ ஆவணத்தை வழங்குவதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழிகாட்டுதல்களின்படி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் ஏற்படும் மரணங்கள் ‘கோவிட் -19 காரணமாக இறப்புகள்’ என்று கருதப்பட வேண்டும். கூடுதலாக, ஒரு கோவிட் -19 நோயாளி 30 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் அல்லது உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு பின்னர் இறப்பதும் கோவிட் -19 மரணமாக வழிகாட்டுதல்களின்படி கருதப்படும்.
தமிழக மின்வாரியத்தில் 56,000 காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
கொரோனா தொற்றில் இருந்து குணமடையாதவர்கள் மற்றும் மருத்துவமனைகளிலோ அல்லது வீட்டிலோ இறந்து விட்டாலும் அது கோவிட் -19 மரணமாக கருதப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. மேலும் விஷம், தற்கொலை, கொலை, விபத்து போன்றவற்றால் ஏற்படும் இறப்புகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தாலும் அது கோவிட் -19 இறப்புகளாக கருதப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !
கொரோனா உயிரிழப்புக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் அதில் உள்ள சிக்கலை போக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் 3வது அலை அச்சத்தினால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.