ஆதார் எண் இல்லாவிட்டாலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் – ஆணையர் அறிவிப்பு!
தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆதார் எண் இல்லாதவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அவர்கள் அறிவித்து உள்ளார்.
தடுப்பூசி பணிகள்:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. பொதுமுடக்க காலத்திலும் எவ்வித தொய்வும் இன்றி தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவாக நடைபெற்றது. மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து தடுப்பூசிகள் தேவைக்கு ஏற்றவாறு பெறப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது. வெளிநாடு, வெளிமாநிலம் செல்பவர்கள், அத்தியாவசிய பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். அரசும் பல்வேறு வழிகளில் பொதுமக்களுக்கு தொடர்ந்து தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துரைத்து வருகிறது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – செப்.15 அறிக்கை தாக்கல்!
ICMR வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி, 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் 97% வரை உயிரிழப்பை தடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் தமிழக அரசு சார்பில் இன்று 10,000 முகாம்கள் மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனவே அனைவரும் முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இன்று சென்னை தடுப்பூசி முகாம்களை பார்வையிட்ட ஆணையர் ககன்தீப் சிங் பேடி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழக மின்வாரியத்தில் 56,000 காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
அவர் பேசுகையில், சாலையோரம் வசிப்போர், வீடற்றோர், ஆதார் எண் இல்லாதவர்களும் முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தெரிவித்து உள்ளார். தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடைபெறும். மறுபுறம் தடுப்பூசிகள் இருப்பும் அதிகமாக உள்ளது. எனவே பொதுமக்கள் விரைந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார்.