தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்… வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

0
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்... வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்... வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்… வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

வளி மண்டல கீழடுக்கு சுழற்‌சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழையும் பனி மூட்டமும் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கு மத்தியில் தற்போது தென்கிழக்கு அரபிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய பகுதிகளில்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால் டிச. 29, 30ம் தேதிகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் தமிழகத்தின் வட மாவட்டங்களில்‌ காலை நேரத்தில் லேசான பனி மூட்டம்‌ நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து டிச. 31 மற்றும் ஜன.1, 2 ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 3 ஆண்டு சட்டப்படிப்புக்கு இனி இவர்களும் விண்ணப்பிக்கலாம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

Exams Daily Mobile App Download

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!