இன்னும் நீங்கள் டிரைவிங் லைசென்ஸ் வாங்க வில்லையா? உடனே வாங்குங்க!! ஜனவரி முதல் புதிய விதிகள் அமல்!!
தற்போது ஆர்டிஓ அலுவலகங்களில் இருக்கும் அதிகாரிகள் லஞ்சங்களை பெற்றுக் கொண்டு தகுதியற்றவர்களுக்கு லைசென்ஸ்களை வழங்கி வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக டிரைவிங் டெஸ்ட் ட்ரக்குகள் தானியங்கி முறையில் தொடங்கப்பட்டு வருகின்றன. மேலும் இது தொடர்பான விரிவான தகவல்களை பார்ப்போம்.
டிரைவிங் லைசென்ஸ்
பொதுவாக டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகங்களுக்கு சென்று டிரைவிங் டெஸ்ட் தடங்களில் சரியாக வாகனங்களை இயற்றிய பிறகு டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும். ஆனால் தகுதியற்றவர்கள் அதிகாரிகளிடம் லஞ்சங்களை கொடுத்து டிரைவிங் லைசென்ஸ் பெற்று வருகின்றனர். இதனால் சாலைகளில் ஏராளமான விபத்துகள் ஏற்படுகிறது.
Follow our Instagram for more Latest Updates
இதனை தடுக்கும் விதமாக டெல்லி அரசாங்கம் ஜனவரி முதல் புதிய விதிமுறை ஒன்றை அமல்படுத்த உள்ளது. அதாவது டெல்லியில் இதுவரை 13 டிரைவிங் டெஸ்ட் தடங்கள் உள்ளன. இதில் ஏற்கனவே 12 தடங்கல் தானியங்கு முறையில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மீதமுள்ள டிரைவிங் டெஸ்ட் தடமும் தானியங்கி முறையில் மாற்றப்பட உள்ளது. இதன் மூலமாக தகுதியான விண்ணப்பதாரர்கள் டிரைவிங் லைசென்ஸ் பெற முடியும்.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்… வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!
Exams Daily Mobile App Download
மேலும் இந்த தானியங்கி டிரக்குகளில் விண்ணப்பதாரர்கள் ஓட்டும் போது தோல்வி அடைந்தால் அவர்கள் எந்த இடத்தில் தவறு செய்தார்கள் என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது. இதன் மூலமாக அவர்கள் அடுத்த முறை தோல்வி அடையாமல் வெற்றி பெற முடியும். இந்த புதிய விதிமுறை மூலமாக ஊழல் ஏற்படுவது தடுக்கப்படுவதுடன் தகுதியான ஓட்டுநர்கள் மட்டுமே சாலைகளில் வாகனங்களை ஓட்ட முடியும். அதன்படி இந்த தானியங்கி முறையானது 2023ம் ஜனவரி மாதத்திற்குள் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.