TN TRB 2,207 காலிப்பணியிடங்கள், கால அவகாசம் நீட்டிப்பு – நவ.13 முதல் தேர்வு!
தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருக்கும் 2,207 பணியிடங்களுக்கு நவம்பர் மாதம் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட இருக்கும் நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்.31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கால அவகாசம்
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருக்கும் சுமார் 2,207 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வுகளை நடத்த இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் அரசுப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் முதல் நிலை, கணினி பயிற்றுநர்கள் முதல் நிலை ஆகிய பிரிவுகளில் 2,207 இடங்கள் காலியாக இருப்பதாகவும் இந்த பணியிடங்களுக்கு அடுத்த மாதம் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை இணைய வழியில் தேர்வுகள் நடத்தப்பட இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஐபிஎல் 2021: விராட் கோஹ்லி முதல் தோனி வரை வீரர்கள் பெறும் சம்பளம் – டாப் 5 பட்டியல் இதோ!
இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இம்மாதம் 17ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அதற்கான அவகாசம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் முதல் நிலை, கணினி பயிற்றுநர்கள் முதல் நிலை உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது.
பொருளாதாரத்திற்கான 2021 நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு – அதிகாரபூர்வ அறிவிப்பு!
இதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு தற்போது நடைபெற்று வரும் நிலையில், விண்ணப்பங்களை செலுத்துவதற்கான கால அவகாசம் வரும் 31ம் தேதி மாலை 5 மணியளவில் நீட்டிக்கப்படுகிறது. அதாவது தமிழ்வழியில் படித்தோருக்கான சான்றிதழ் (PSTM) சார்ந்து மென்பொருளில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருப்பதாலும், விண்ணப்பதாரர்களின் வேண்டுகோளை ஏற்று இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.