விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து நமீதா வெளியேறியதற்கு இது தான் காரணம் – திருநங்கை வைஷு பகிர்வு!
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஷோவான ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் நமீதா மாரிமுத்து திடீரென வெளியேறிய பிறகு அதற்கான காரணம் குறித்து திருநங்கை வைஷு ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் திருநங்கை நமீதா மாரிமுத்து. மக்களின் பலத்த ஆதரவுடன் இந்த போட்டியில் பங்குபெற்ற நமீதா இந்நிகழ்ச்சியின் இறுதி வரை நிலைத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 துவங்கி கிட்டத்தட்ட 7 நாட்களுக்குள்ளாகவே நமீதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
ஐபிஎல் 2021: விராட் கோஹ்லி முதல் தோனி வரை வீரர்கள் பெறும் சம்பளம் – டாப் 5 பட்டியல் இதோ!
இது தொடர்பாக கூறப்பட்ட காரணங்களில், நமீதா உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறியது முக்கியமானதாகும். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமீதா விலகியதற்காக சில முக்கிய காரணங்கள் குறித்து அவரது சகோதரியும், திருநங்கையுமான வைஷு ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அதாவது திருநங்கையாக மாறுவதற்கு முன்பிலிருந்து நமீதாவுடன் பயணித்த முக்கிய தருணங்களை கூறிய அவர், தற்போது நமீதாவின் அம்மாவிடம் பேசியதாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் ‘ரோஜா’ வரை டாப் சீரியல்களின் இன்றைய ப்ரோமோ – ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!
குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில், கடந்து வந்த பாதை குறித்து பேசிய போது பழைய நினைவுகளை பகிர்ந்ததால் நமீதா மாரிமுத்துவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் பிக்பாஸ் போட்டியாளர் தாமரை செல்வி திருநங்கைகள் குறித்து பேசியது தவறு என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நமீதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராகவும் ரீஎன்ட்ரி கொடுக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.