பொருளாதாரத்திற்கான 2021 நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு – அதிகாரபூர்வ அறிவிப்பு!
இந்த ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு தொழிலாளர் பொருளாதாரம் குறித்த ஆராய்ச்சி மற்றும் சாதாரண உறவுகளின் பகுப்பாய்வு ஆகியவற்றில் சிறந்து விளங்கிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்காக உலகின் பெரும் மதிப்பு மிக்க நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நோபல் பரிசுகளை பெரும் ஒவ்வொரு விருதாளர்களுக்கும் தங்கப்பதக்கத்துடன் சில கோடிகள் ரொக்கப்பரிசாகவும் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவோரின் பட்டியல் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
இன்று முதல் இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மத நிகழ்வுகளுக்கு அனுமதி! கூடுதல் தளர்வுகள்!
வழக்கமாக சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வைத்து மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளுக்கான நோபல் பரிசுகளும் அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயில் வைத்தும் பரிசு குழுவினரால் அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இன்றும் (அக்.11) 2021 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஒப்புதல் கடிதம் கட்டாயம்!
அதன்படி, ‘ஆல்பிரட் நோபலின் நினைவகத்தில் பொருளாதார அறிவியலுக்கான 2021 நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த டேவிட் கார்டு, ஜோசுவா டி. ஆங்கிரிஸ்ட் மற்றும் கைடோ W இம்பென்ஸ் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது’ என தேர்வுக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது தொழிலாளர் பொருளாதாரம் குறித்த ஆராய்ச்சி மற்றும் சாதாரண உறவுகளின் பகுப்பாய்வு ஆகியவற்றில் இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.