இன்று முதல் இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மத நிகழ்வுகளுக்கு அனுமதி! கூடுதல் தளர்வுகள்!

0
இன்று முதல் இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - மத நிகழ்வுகளுக்கு அனுமதி! கூடுதல் தளர்வுகள்!
இன்று முதல் இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - மத நிகழ்வுகளுக்கு அனுமதி! கூடுதல் தளர்வுகள்!
இன்று முதல் இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மத நிகழ்வுகளுக்கு அனுமதி! கூடுதல் தளர்வுகள்!

தற்போது வரை ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் அமலில் இருந்த ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாகவும் கடைகள், சந்தைகள், வணிக நிறுவனங்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வு

ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போதுள்ள நோய் தொற்று நிலவரத்தை ஆய்வு செய்த அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை தடுக்க வெளியிடப்பட்ட முந்தைய வழிகாட்டுதல்களை திருத்தி புதிய வழிகாட்டுதல் நடைமுறைகளை அம்மாநில அரசு இன்று (அக்.11) வெளியிட்டுள்ளது. அந்த வகையில் மத நிகழ்ச்சிகளை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிகழ்வுகளில் 200 பேருக்கு மேல் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஒப்புதல் கடிதம் கட்டாயம்!

இது தொடர்பான ஒரு உத்தரவில், 200 பேர் வரை கலந்து கொள்ளும் கூட்டத்தை நடத்துவதற்கு முன்பாக அம்மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிப்பதன் மூலம் கூட்டங்கள் நடத்தப்படலாம் என்றும் நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் அனைவரும் குறைந்தபட்சம் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விலங்கு கண்காட்சிகள் போன்ற நிகழ்வுகளும் நிர்வாகத்தின் முன் அறிவோடு ஏற்பாடு செய்யப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனுடன் கடைகள், மால்கள், வணிக நிறுவனங்கள் போன்றவை இனி நாள்தோறும் இரவு 10 மணி வரை செயல்படலாம் என்றும் பெட்ரோல் மற்றும் டீசல் பம்புகள், பெட்ரோலியம் மற்றும் எரிவாயு தொடர்பான விற்பனை நிலையங்கள் அதற்கான திறப்பு மற்றும் மூடும் நேரத்தை முடிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தினசரி இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த புதிய வழிகாட்டுதல்கள் அனைத்தும் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

அக்.18 வரை அனைத்து விடுமுறைகளும் ரத்து – மாநில காவல்துறை அறிவிப்பு!

அதே நேரத்தில் முந்தைய வழிகாட்டுதல் நெறிமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அனுமதிக்கப்பட்ட எல்லா நிகழ்வுகளிலும் முகக்கவசம் அணிவது, கை சுத்திகரிப்பு, சமூக இடைவெளி மற்றும் நெருக்கமான இடங்களில் சரியான காற்றோட்டம் ஆகியவை கட்டாயம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று (அக்.10) ஒரு நாளில் நான்கு பேருக்கு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது கூடுதல் தகவல்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!