தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஒப்புதல் கடிதம் கட்டாயம்!
தமிழகத்தில் 1 முதல் 8 வரை பள்ளிகள் நவம்பர் 1 ம் தேதி பள்ளிகள் திறக்கும் போது பெற்றோரின் ஒப்புதல் கடிதம் அவசியம் கொண்டு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
தொடக்கப்பள்ளிகள்:
தமிழகத்தில் நவம்பர் 1 ம் தேதி முதல் தொடக்கப்பள்ளிகள் திறக்க பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிறு குழந்தைகள் என்பதால் அவர்களுக்கு எளிதில் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது. அதனால் பள்ளிகளை திறப்பதற்கு தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் தற்போது கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் முற்றிலும் குறையவில்லை. இன்னும் சில நாட்கள் அதாவது தீபாவளி முடிந்த பிறகு பள்ளிகள் திறக்கலாம் என்று பொதுமக்களிடையே அச்சம் நிலவுவதாக கூறுகின்றனர். ஏனெனில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு அதிக அளவில் மக்கள் கூடுவதால் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதால் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு முகக்கவசம் அணிவதை கண்காணித்து வருகின்றனர்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – தடுப்பூசி விபரங்கள் சேகரிப்பு!
இத்தகைய சூழ்நிலையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்த செய்தி சந்தேகத்திற்கு இடமாகவே இருந்தது. இந்நிலையில் திருச்சி ரயில்வே ஜங்சன் பகுதியில் உள்ள கதர் கிராம தொழில் வாரிய சிறப்பு விற்பனையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் தொடக்கப்பள்ளிகள் கட்டாயம் திறக்கப்படும். இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதை தெளிவாக கூறினார். அதனால் நவ-1 ம் தேதி கண்டிப்பாக 1 முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்களிடம் ஒப்புதல் கடிதம் பெற்றுக்கொள்ளுமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டை சந்திக்கும் மாநிலங்கள் – பட்டியல் வெளியீடு!
அத்தகைய கடிதத்தில் எனது மகன்/மகள் பள்ளிக்கு அனுப்ப முழு விருப்பத்துடன் ஒப்புதல் அளிக்கிறேன். நான் கொரோனா தொற்று பற்றி முழுமையாக அறிந்துள்ளேன். அதற்கு ஏற்றார் போல் என் குழந்தையை நான் பள்ளிக்கு அனுப்புவேன். மேலும் பள்ளித்தலைமையாசிரியர் கூறும் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை நான் பின்பற்றி நடப்பேன் என்று அந்த கடிதத்தில் எழுதப்பட வேண்டும். இவ்வாறு எழுதப்பட்ட கடிதத்தில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் கையொப்பமிட்டு வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.