தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – தடுப்பூசி விபரங்கள் சேகரிப்பு!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களிடம் குடும்பத்தில் உள்ளவர்களின் தடுப்பூசி செலுத்திய விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
ரேஷன் கார்டு:
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் மலிவு விலையில் பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். இரண்டாம் அலை கொரோனாவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட போது அரசு ரேஷன் கடைகள் வாயிலாக மக்களுக்கு நிவாரணம் வழங்கி உதவியது. மேலும் திமுக தலைமையிலான அரசு ரேஷன் கடைகள் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்று மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் ரேஷன் அட்டைதாரர்களிடம் தடுப்பூசி செலுத்திய விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டை சந்திக்கும் மாநிலங்கள் – பட்டியல் வெளியீடு!
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை காக்கும் பொருட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அரசின் இந்த விழிப்புணர்வால் முதலில் தடுப்பூசி செலுத்தி கொள்ள தயங்கிய மக்களுக்கும் தற்போது ஆர்வத்துடன் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இன்னும் சிலர் தேவையற்ற வதந்திகளை நம்பி தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. மேலும் முதல் டோஸ் செலுத்திக் கொண்டோர் இரண்டாம் டோஸ் செலுத்த கால அவகாசம் முடிவடைந்து இன்னும் செலுத்தாமல் உள்ளனர்.
இனி டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க ‘இது’ கட்டாயம் – அதிர்ச்சியில் மது பிரியர்கள்!
தற்போது தடுப்பூசி செலுத்துவதில் முழு இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கில் வாரந்தோறும் ஞாயிற்று கிளைகளில் மெகா தடுப்பூசி திருவிழாவை அரசு நடத்தி வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்களை சேகரித்து வருகிறது. அந்த வகையில் ரேஷன் அட்டைதாரர்களிடம் குடும்ப உறுப்பினர்களின் தடுப்பூசி செலுத்திய விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களின் விவரமும் சேகரிக்கப்படுகிறது. முழு விவரம் பெற்றபின் மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.