TN TRB ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க !
தமிழக ஆசரியர் தேர்வு வாரியம் ஆனது தற்போது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளவது பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு:
சென்னை- 06, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் மற்றும் தாள்/ 2022ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வாயிலாக. 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் 26.04.2022 வரை வழங்கப்பட்டது. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I க்கு 2,30,878 பேரும் மற்றும் தாள் II க்கு 4,01,886 பேரும் மொத்தமாக ,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை மனுக்கள் இவ்வலுவலகத்திறகு பெறப்பட்டு வருகிறது. ஆகையால் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையினை ஏற்று, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I மற்றும் தாள் II (TNTET Paper I and Paper II) க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் 11.07.2022 முதல் 16.07.2022 வரை திருத்தம் செய்யலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. சில தொழில்நுட்ப காரணங்களால் திருத்தம் மேற்கொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவை அணுகவும்.