TN TRB தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் சீரமைப்பு!
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம், விரைவில் மறு சீரமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் அதற்கான பணிகளை மேற்கொள்ள வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம்:
தமிழகத்தில் ஆசிரியர் கல்வியை முடித்தவர்கள் அரசு ஆசிரியர் பணிக்கு செல்வதற்கு தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வாணையம் நடத்தும் தகுதி தேர்வில் பங்கேற்று தேர்ச்சி அடைய வேண்டும். அதன் பின் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு பணி ஆணை வழங்கப்படும். ஏற்கனவே கடந்த வருடங்களில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்னும் பணி ஆணை வழங்கப்படாமல் உள்ளது. மேலும் கொரோனா பரவல் காரணத்தால் நடைபெற இருந்த TET தேர்வும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்று 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டது.
TNPSC ரூ.56100 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – ஏராளமான காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!
இதற்கு பல எதிர்ப்புகள் தெரிவித்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அவர்களின் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு தமிழக அரசும் அரசாணையை வெளியிட்டது. இதனால் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் 2 வருடங்களுக்கு பிறகு தற்போது ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 13ம் தேதி அறிவிப்பு வெளியாகி தற்போது விண்ணப்பபதிவுகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது.
ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் B.ED, D.TED இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், ஆசிரியர் தேர்வு வாரியம் சீரமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்க குறிப்பில், ஆசிரியர் தேர்வு வாரியத்தை மறுசீரமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. வல்லுநர் குழுவின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.