TN TET தாள் 1 தேர்வு முடிவுகள் – தேர்வு வாரியம் வெளியிட்ட தேர்ச்சி விவரம்!
தமிழகத்தில் ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான டெட் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. அண்மையில் இத்தேர்வின் முடிவுகளும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்ச்சி சதவீதம் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
டெட் தேர்வு:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் TET தேர்வின் மூலம் நிரப்பட்டு வருகிறது. இந்த தகுதித்தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்றால் கல்வித்துறை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் TET தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது.
Follow our Instagram for more Latest Updates
இதனையடுத்து 2022ம் ஆண்டு டெட் தேர்வை நடத்த கோரிக்கைகள் எழுந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடபட்டது. அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் வரை TET முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள்களுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த அக்டோபர் மாதம் கணினி வாயிலாக இடைநிலை ஆசிரியர்களுக்கான TET முதல் தேர்வு நடைபெற்றது.
வெகு நாட்கள் கழித்து ஆறுதல் அளித்த தங்கம் விலை.. ரூ.464 குறைவு – நகை பிரியர்கள் உற்சாகம்!
Exams Daily Mobile App Download
இதன் முடிவுகளை கடந்த 7ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் மொத்தம் 15% மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது தேர்வு எழுதிய மொத்தம் 1,53,233 பேரில் 21,543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தகவல் தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.