TN TET தேர்வு தேதியில் மாற்றம்? வலுக்கும் கோரிக்கைகள்! இதற்காக தான்!
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள ஆசிரியர் தகுதி தேர்வு அன்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மற்றொரு தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதால், தேர்வர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தேர்வில் குழப்பம்:
தமிழகத்தில் கடந்த இருபது வருடங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக எந்த ஒரு அரசு பணிக்கும் பணியாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இதனால், அரசுப்பணி கனவோடு காத்திருக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை மட்டுமல்லாது, அரசு துறைகளில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த 2020 ம் ஆண்டின் இறுதியில் நிலைமை சீராக தொடங்கியதை அடுத்து, 2021ம் ஆண்டில் அரசு துறைகளில் பணிக்கான 32 தேர்வுகள் நடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
உலக நாடுகளில் குரங்கு அம்மை வைரஸ் மாறுபாடு – WHO புதிய அறிவிப்பு!
அதேபோல், நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்து வரிசையாக அரசு பணியாளர் நியமனத்துக்கான தேர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. கடந்த மே மாதம் 21ம் தேதி குரூப் 2 தேர்வும், ஜூலை 24ம் தேதி குருப் 4 தேர்வும் நடத்தபட்டது. இதற்கான அறிவிப்புகளை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் TN TET தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி, முன்னதாக ஆகஸ்ட் 25 முதல் ஆகஸ்ட் 30, 2022 வரை TNTET தேர்வை நடத்த TN TRB திட்டமிட்டிருந்தது. ஆனால், சில நிர்வாக காரணங்கள் காரணமாக TN TET தேர்வு செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தப்படும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
இதனால், தற்போது ஒரு புது குழப்பம் எழுந்துள்ளது. அதாவது, TNPSC சார்பில் அறநிலையத் துறை செயல் அலுவலர் பதவிக்கு நடத்தப்படும் தேர்வானது செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான நாள் மே மாதமே அறிவிக்கப்பட்டு விட்டது. அரசுப் பணி கனவோடு பலரும் இந்த இரண்டு தேர்வுகளுக்கும்விண்ணப்பித்துள்ளனர். தற்போது TN TET தேர்வின் நாள் மற்றம் செய்யப்பட்டுள்ளதால், இரண்டு தேர்வுக்கும் விண்ணப்பித்தவர்கள் ஏதேனும் ஒரு தேர்வில் கலந்து கொள்ள முடியாது. இந்த இரண்டு தேர்வுகளுக்கும் பல மாதங்களாக தேர்வர்கள் தயாராகி வருவதால், ஆசிரியர் தகுதி தேர்வை வேறு தேதியில் மாற்றி வைக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.