உலக நாடுகளில் குரங்கு அம்மை வைரஸ் மாறுபாடு – WHO புதிய அறிவிப்பு!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸை தொடர்ந்து குரங்கு அம்மை தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்த குரங்கு அம்மை வைரஸ் தொற்று கொரோனாவை போல உருமாற்றம் அடைந்து வருகிறது. இதற்கு உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களை சூட்டி உள்ளது.
குரங்கு அம்மை வைரஸ்
உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் முதன் முதலில் சீனாவில் இருந்து பரவ தொடங்கியது. மேலும் சீனாவை தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் விரைவாக பரவி பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாட்டு அரசுகளும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. இத்தகைய முன்னேற்பாடு பணிகளால் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்தது. இதிலிருந்து மீண்டு விட்டோம் என்று எண்ணி கொண்டிருக்கையில் அடுத்த தாக்குதலாக குரங்கு அம்மை வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது.
தமிழகத்தில் 15 காவல்துறை அதிகாரிகளுக்கான பதக்கங்கள் – அரசு அறிவிப்பு!
இந்த குரங்கு அம்மை வைரஸானது முதலாவதாக மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலும், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவ ஆரம்பித்தது. இந்நோய் தாக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி, முதுகு வலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் போன்ற அறிகுறிகள் தென்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது ஆப்ரிக்காவை தொடர்ந்து குரங்கு அம்மை இதுவரை 89 நாடுகளில் 27 ஆயிரத்து 814 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் குரங்கு அம்மை வைரஸ் கொரோனா வைரஸை போல மாறுபாடு அடைந்து வருகிறது.
இதற்கு சுகாதார அமைப்பு புதிய பெயர் சூட்டி வருகிறது. அதாவது மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள குரங்கு அம்மை கிளேட் 1, மேற்கு ஆப்பிரிக்காவில் கிளேட் 2 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதே போல கிளேட்-2 வைரஸ், 2 துணை வைரஸ்களை கொண்டுள்ளது. அவைகளுக்கு கிளேட் 2-ஏ, கிளேட் 2-பி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயர்கள் உலகளாவிய நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து சூட்டப்பட்டுள்ளது.