TN TET தேர்விற்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – பாடத்திட்டம், வயது வரம்பு & மதிப்பெண் விவரம் இதோ!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில் தேர்வுக்கான தகுதிகள், பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை விவரங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
TET:
இந்தியாவில் ஆசிரியர் கல்வி முடித்தவர்கள் அரசு ஆசிரியர்கள் பணிக்கு செல்ல மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பிறகு பணி ஆணை வழங்கப்படும். இந்த நிலையில் இந்த TET தேர்வு கொரோனா பெருந்தொற்றால் 2 வருடமாக நடைபெறவில்லை. நடப்பாண்டு பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் தேர்வுகளை நடத்த கோரிக்கை எழுந்ததது. மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதால் TET தேர்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் கவனத்திற்கு – அரசு முக்கிய அறிவிப்பு!
இதனையடுத்து கடந்த மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித்தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. டெட் தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளது. இதில் முதல் பட்டதாரி ஆசிரியர்களுக்குரியது பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் கல்வி (B.ED) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அடுத்ததாக தாள் 2 இடைநிலை ஆசிரியர்களுக்குரியது ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு (D.TED) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முதல் தாள் எழுதுவதற்கு, 12 ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) முடித்திருக்க வேண்டும்.
இரண்டாம் தாள் எழுத உள்ளவர்கள் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) அல்லது ஆசிரியர் பயிற்சியில் (B.Ed) இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மார்ச் 13ம் தேதி முதல் தொடங்கிய விண்ணப்பபதிவு கடந்த ஏப்ரல் 13ம் தேதியுடன் முடிவடைந்தது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் எழுதலாம். உச்ச வயது வரம்பு இல்லை. தேர்வில் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் பகுதியில் 30 மதிப்பெண்கள், மொழிப்பாடம் 30 மதிப்பெண்கள் ஆங்கிலம் 30, கணிதம் 30, சுற்றுச்சூழல் கல்வி 30 என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் தேர்வு நடைபெறும்.