தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 20) பள்ளிகள் இயங்கும் – கல்வித்துறை உத்தரவு!

0
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 20) பள்ளிகள் இயங்கும் - கல்வித்துறை உத்தரவு!
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 20) பள்ளிகள் இயங்கும் – கல்வித்துறை உத்தரவு!

தமிழகத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் நாளை (மார்ச் 20ஆம் தேதி) மேலாண்மை குழு கூட்டம் மற்றும் பெற்றோர் கூட்டம் நடைபெறும் என்றும் அதற்காக அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

நாளை பள்ளிகள் இயங்கும்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மாணவர்களை பாதுக்காக்க, பள்ளிகள் முழுவதும் மூடப்பட்டு, வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. தற்போது நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக தாக்கம் குறைந்து வருவதால் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியாகியுள்ளது. இதனால் மாணவர்களுக்கு விரைவில் பாட திட்டங்களை முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

இருப்பினும் இன்று (மார்ச் 19ஆம் தேதி) சனிக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை என்று அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு படி இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. ஏனென்றால் பெற்றோர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், மாநிலத்தில் உள்ள 37,391 அரசுப் பள்ளிகளிலும் , பள்ளி அளவிலான மேலாண்மைக் குழுக்களை மறுசீரமைக்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் 52 லட்சம் குழந்தைகளின் பெற்றோருக்கு ( மார்ச் 20ம் தேதி) நாளை விழிப்புணர்வுக் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் பெற்றோர்களுடன் கலந்தாய்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

TN TRB ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

நாளை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 20-ஆம் தேதி) கலந்தாய்வு நடைபெற இருப்பதால், அரசுப் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் நாளை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று கட்டாய அறிவிப்பினை பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ளார். கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் உருவாக்கப்பட்ட பள்ளி நிர்வாகக் குழுக்களை மாநில அரசு சீரமைத்து வருகிறது. 20 பேர் கொண்ட குழுவிற்கு ஒரு பெற்றோர் தலைமை தாங்குவார், மேலும் ஒரு சிறப்பு குழந்தையின் பெற்றோர் துணைத் தலைவராக இருப்பார். தன்னார்வலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சுயஉதவிக்குழு உறுப்பினர்களும் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!