திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டு உள்ளோர் கவனத்திற்கு – மார்ச் 21 முதல் முன்பதிவு தொடக்கம்!
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவில் தற்போது இலவச நேரடி தரிசன டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்த 3 மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை வழங்க உள்ளது. இதற்கான முன்பதிவு தேதிகளையும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான விரிவான தகவல்களை பற்றி பார்ப்போம்.
தரிசன டிக்கெட்:
ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். அதனால் கொரோனா கால கட்டத்தில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தேவஸ்தானம் அமல்படுத்தியது. இதில் குறிப்பாக இலவச நேரடி தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மட்டுமே இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 20) பள்ளிகள் இயங்கும் – கல்வித்துறை உத்தரவு!
மேலும் நாள் ஒன்றுக்கு 10000 தரிசன டிக்கெட் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. திருப்பதிக்கு வருகை புரியும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தியதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழையும் பெற்றிருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தேவஸ்தானம் விதித்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் இலவச நேரடி தரிசன டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. அத்துடன் தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.
தற்போது சிறப்பு கவுண்டர்களில் 30000 நேரடி தரிசன டிக்கெட்டுகள் வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த 3 மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானத்தின் இணையதளத்தில் வெளியிட உள்ளது. அத்துடன் நாள் ஒன்றுக்கு 30000 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை வழங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை வருகிற 21ம் தேதியும், மே மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகளை வருகிற 22ம் தேதியும், ஜூன் மாதத்திற்கான டிக்கெட்டுகளை வருகிற 23ம் தேதியும் வழங்க உள்ளது.